பூசணிக்காய் பரோட்டா
செய்முறை :- பூசணிக்காய் கால் கிலோ, தோல் சீவிய விட்டு துண்டுகளாக வெட்டி ஆவியில் வேக வைக்கவும். பின் அதை நன்றாக மசித்து விட்டு 1 டீஸ்பூன் வத்தல் பொடி, அரை டீஸ்பூன் சீரகப் பொடி, கரம் மசாலா அரை டீஸ்பூன், கஸ்தூரி மேதி அல்லது மல்லி இலை பொடியாக வெட்டியது. சுவைக்கு ஏற்ப உப்பு, பெருங்காயத்தூள் வெள்ளை எள் 3 டீஸ்பூன் சேர்த்து, 2 கப் கோதுமை மாவு சேர்த்து நன்றாக சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து, எண்ணெ தடவி 10 நிமிடம் மூடிவைத்து பின் உருண்டையாக சப்பாத்தி மாதிரி திரட்டி ஒரங்களை சதுரமாக மடித்து, மறுபடியும் சதுர சப்பாத்திகளாக திரட்டி, டவாவில் லேசாக எண்ணெய் தடவி ,சப்பாத்திகளை போட்டு நெய் விட்டு மிதமான தீயில் இரண்டு பக்கமும் வேக வைக்கவும். நெய் இல்லாவிட்டால் எண்ணெய் விட்டும் வேக வைக்கலாம். சூடான சப்பாத்திகளில் சிறிதளவு வெண்ணெய் வைத்து உருகியவுடன் சாப்பிட்டால் சாப்டான சுவையான பூசணி சப்பாத்தி ரெடி.
0
Leave a Reply